Sunday 13 September 2020

கண்ணன் புதுப்பாட்டு


பல்லவி:
அம்மா

பள்ளி போகும்  கண்ணே நீ இனி

போக வேண்டாம் கண்ணே


அனுபல்லவி:
கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:
அம்மா

பூஸ்ட் பாலு கண்ணே, உனக்கு
கை நிறைய ஓரியோவும் கண்ணே; ஆனா

வெளியே போக வேண்டாம் கண்ணே


கண்ணன்:

பாலு வேண்டாம்; ஓரியோ வேண்டாம்,
வெளியே போக வேணும், தாயே

போக வேணும் தாயே; விளையாட போக வேணும், தாயே

அம்மா

ஊரு  நதிக் கரையில் கள்வன் பயம் உண்டு
வந்துனை பிடித்தால் கலங்கிடுவாய் கண்ணே

வெளியே போக வேண்டாம் கண்ணே

 

கண்ணன்:

கள்ளணுன்டோ? கண்டதுண்டோ தாயே?
கள்வன் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் ஆக்கிடுவேன் தாயே
போக வேணும் தாயே; விளையாட போக வேணும், தாயே

 

அம்மா

 

கோவிட் கள்ளன் பிடித்து விட்டான்  இவ்வுலகை கண்ணே

கோவிலில்லை, பூஜையில்லை சென்று வணங்க கண்ணே

மாஸ்க் மட்டும் முக்கியம், தூர தூரமும் முக்கியம்

வெளியே போக வேண்டாம் கண்ணே

 

கண்ணன்:
கோவர்த்தன கிரியில் கோர காட்டு மிருகமெல்லாம் ஜெயித்திடுவேன் தாயே
போக வேணும் தாயே – விளையாட போக வேணும், தாயே


அம்மா

 

நீ கலியுக கண்ணனில்லை, கண்ணே;  நீ கோவிட் உலக கண்ணனடா கண்ணே

ஐ-பாட் தரேன் கண்ணே, டீவி டைம் தரேன் கண்ணே

வெளியே போக வேண்டாம் கண்ணே

 

கண்ணன்:

பள்ளி வேண்டாம்; கோவில் வேண்டாம்,

பாலு வேண்டாம்; ஓரியோ வேண்டாம்

ஐ-பாட் போதும், டீவி போதும் தாயே

வெளியே போக மாட்டேன் தாயே


அம்மா


என் கண்ணன் நல்ல கண்ணன்தானே

எனக்கும் டீவி நேரம், மொபைல் நேரம் கிடைச்சுடுத்து கண்ணே

கோவிட்டுக்குதான் தாங்க்ஸ் சொல்லனும் கண்ணே!

கொமசா

Thursday 10 September 2020

துணி தோய்க்க கல்லிருக்க


துணி தோய்க்க கல்லிருக்க

தோய்க்க எந்திரம் வந்ததே

மனிதன் வெறுக்க கல்லு கல்லு ஆனதே!

 

மாவரைக்க கல்லிருக்க

மாவரைக்கும் எந்திரம் வந்ததே

மனிதன் வெறுக்க கல்லு கல்லு ஆனதே!

 

மாட்டு கொட்டகை வீட்டில் இருக்க

மாட்டு வீடு மாடி வீடு ஆனதே

மனிதன் வெறுக்க மாட்டு வீடு ரோடு ஆனதே!

 

மாட்டு பால் மறந்து போக

புட்டி பால் குடிக்கும் நிலை வந்ததே

மனிதன் வெறுக்க மாட்டு நினைவும் மறந்ததே!

 

வீட்டு உணவு சுகமா இருக்க

உணவகம் போய் உடல் பாழானதே

மனிதன் வெறுக்க வீட்டு உணவு விஷமானதே!

 

மனிதன் வாழ்வு போய் சாவு சிரிக்க!

மனிதன் அன்று வீட்டிலே

மனிதன் இன்று சேற்றிலே

 

விஷத்தில் மிக்க கோவிட் சுத்துதே!

புனித ஈசனை  மறந்து போன மனிதனே

உன்னை கோவிட் வந்து ஆட்டி அடக்கி விட்டதே!

 

மூளையற்ற மனிதனே

வந்த வழியை பாரடா

பசுவை போல வாழுடா!

 

வாழும் வழியை தேடடா

மூளையற்ற மனிதனே

வாழும் வழியை தேடடா!

 

கோமச்சா